பொழுதுபோக்கு

மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2 ; நடக்கப்போவது என்ன?

பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா ரானாவத் ஆகியோர் நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன் பிறகு படத்தில் சில வேலைகள் இருப்பதால் தாமதமாக அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.

மேலும் இதற்குக் காரணம் விஷாலின் மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்த காரணத்தினாலும் சந்திரமுகி 2 தள்ளிப்போனதாக கூறப்பட்டது.

லாரன்ஸ் நினைத்தது போல் மார்க் ஆண்டனி படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

தற்போது நல்ல நேரம் விஷாலுடன் போட்டி போடவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் லாரன்ஸ். ஆனாலும் அவருடைய சந்திரமுகி 2 படத்துடன் மூன்று படங்கள் மோத இருக்கிறது.

அதில் சந்திரமுகி 2 படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பு உள்ள படம் என்றால் ஜெயம் ரவியின் இறைவன். தனி ஒருவன் சாயலில் இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் நயன்தாராவும் இந்த படத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக தான் இருக்கிறது. அடுத்ததாக பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் சித்தா என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் சித்தார்த் மற்றும் ஒரு குழந்தை இடையே ஆன கதை களத்தை கொண்டிருக்கிறது. கடைசியாக ஆதாம் பாவா இயக்கத்தில் இயக்குனர் அமீர் மற்றும் மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் உயிர் தமிழுக்கு படமும் செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 படத்துடன் போட்டியிட இருக்கிறது.

ஆகையால் ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாகுவதால் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் லாரன்ஸின் சந்திரமுகி படம் கண்டிப்பாக ஓரளவு நல்ல வசூலை பெறும் எனும் கோலிவுட் வட்டாரத்தில் நம்பப்பட்டு வருகிறது.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content