இலங்கை

வத்தளையில் 3 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை வத்தவளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டத்துக்கமைய வத்தளை, அவரக்கொட்டுவ பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் ஏனைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள், பாதாள குழு உறுப்பினர் கெஹேல் பத்தர பத்மேவின் போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

(Visited 3 times, 3 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்