குடியேற்றக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது ஆக்ரோஷமான குடியேற்றக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் முன்னெப்போதையும் விட “கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து சுமார் 700 கடற்படையினரை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
அங்கு நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குடியேறிகளை வைத்திருக்கும் ஒரு கூட்டாட்சி தடுப்பு மையத்திற்கு வெளியே ஒன்றுக்கூடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் தெருக்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களிடம் ஒலிபெருக்கியில் “பகுதியை காலி செய்ய” கூறிய பின்னர், காவல்துறையினர் வெடிகுண்டுகளை வீசியதாகவும், ரப்பர் தோட்டாக்களைச் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
கூட்டாட்சி தடுப்பு மையத்திற்கு வெளியே இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்த இடத்தைக் காக்கும் கலகக் கவசத்தில் இருந்த தேசிய காவல்படையினரை நோக்கி “பன்றிகள் வீட்டிற்குச் செல்லுங்கள்!” என்று கோசமிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.