செய்தி

இங்கிலாந்தில் புற்றுநோய் மருந்து உட்பட 400 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இங்கிலாந்தில் புற்றுநோய் மற்றும் பக்கவாத மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீமோதெரபி மருந்துகள், இரத்த உறைவு சிகிச்சைகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியாவுக்கான (schizophrenia)  மருந்துகள் உட்பட  378 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக NHS பட்டியலிட்டுள்ளது.

இந்த சூழ்நிலை மருத்துவர்கள் நோயாளிகளை குணப்படுத்த மாற்று வழிகளை கண்டுப்பிடிக்க கட்டாயப்படுத்தும் என்றும், தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்வு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NHS இங்கிலாந்தின் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 80 மருந்துகள் உற்பத்தியாளர் இல்லாத மருந்துகளாகும், அதாவது தற்போதைய விநியோகம் தீர்ந்துவிட்டால் அவை பற்றாக்குறையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகரித்த கட்டண அச்சுறுத்தல்களும் மருந்து பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!