இந்தியா

பங்களாதேசில் தேர்தல் நெருங்கும்வேளை இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!

இந்தியாவுக்கும், பங்களாதேசுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இராஜதந்திர உறவு முதல் விளையாட்டுத்துறைவரை அது தற்போது எதிரொலித்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பங்களாதேசில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தார் மற்றும் நெருக்கமானவர்களை நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பங்களாதேஷில் எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே, அங்குள்ள பாதுகாப்பு சூழல் கருதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தூதரக செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறும் என தெரியவருகின்றது. அதிகாரிகள் சிலர் அங்கேயே இருப்பார்கள் எனக் கூறப்படுகின்றது.

தலைநகர் டாக்காவில் பிரதான தூதரகமும், ஏனைய சில பகுதிகளில் இந்திய துணை தூதரகங்களும் இயங்கி வருகின்றன.

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருவது தொடர்பில் இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!