இலங்கை செய்தி

கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லப்பட்ட தேரர்

லிஹினிகிரிய, பொத்துஹெர பொத்குல் விகாரையில் வசித்து வந்த பவிலிகமுவைச் சேர்ந்த சுஜாத தேரர் நேற்று (29) இரவு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொத்துஹெர பரபாவில பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமான தனியார் வீடொன்றில் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேரர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொறியியலாளர் என தெரிவிக்கப்படுகிறது. 64 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் துறவு வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட தேரர் திருமணமானவர் எனவும் அவரது மனைவி சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டுச் சென்றதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இறந்த தினத்தன்று, இரவில் தேரரை சந்திக்க வந்த நபர் ஒருவர், வீட்டை கவனித்துக் கொண்டிருந்த தம்பதிகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

அன்றிரவு தேரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தேரருடன் இருந்த நபரே இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!