இலங்கை

இலங்கையில் ஆன்லைன் மூலம் பெரும்தொகை பணத்தை கொள்ளையடித்த பெண் கைது!

ஆன்லைனில் பெரும் தொகையை ஏமாற்றிய வெளிநாட்டு பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் உக்ரைன் நாட்டு பிரஜை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த  2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் முன்னணி வங்கியொன்றின் கணக்கு சட்டவிரோதமான முறையில் இணையத்தில் அணுகப்பட்டதாகவும்,  குறித்த பெண்ணின் கணக்கில் ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சம் ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு  அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எவ்வாறாயினும் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!