அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: எதிரணி வலியுறுத்து!

சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Jagath Wickramaratne பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

“இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார்.

சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் ஒருவரே, இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அது தொடர்பில் இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணை முன்னெடுக்குமானால் சபாநாயகர் பதவி விலக வேண்டும்.

இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவை ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். அந்த பேரவையின் தலைவராக சபாநாயகரே பதவி வகிக்கின்றார்.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம் எனில், சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் பதவி விலக வேண்டும் எனவும் மரிக்கார் எம்.பி. மேலும் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!