பொழுதுபோக்கு

முதல்வனை ரஜினி மிஸ் பண்ணினதுக்கு உண்மையான காரணம் வெளியானது…

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் முதல்வன். இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார்.

ஒரு சாமானியன் ஒரு நாள் முதல்வர் ஆனார் என்ன நடக்கும் என்பதை தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தி இருப்பார் ஷங்கர்.

இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அமைந்திருந்தது.

இத்தகைய மாஸ் வெற்றியை ருசித்த முதல்வன் படத்தை விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் மிஸ் பண்ணிவிட்டார்கள். அதிலும் இப்படத்தை கதையை நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் எழுதி இருந்தாராம் ஷங்கர்.

ரஜினிக்கும் கதை மிகவும் பிடித்துப் போனாலும் அதில் அரசியல் இருப்பதால் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததற்கான காரணமே வேறையாம்.

நேற்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய திமுக அமைச்சர் எ.வ.வேலு,

ரஜினிகாந்த் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு காரணமே கலைஞர் தான் என கூறினார். முதல்வன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தபோது கலைஞர் கருணாநிதி தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தாராம்.

பெரியவர் கருணாநிதி முதல்வராக இருக்கும் போது நான் முதல்வராக நடிப்பதா… முடியவே முடியாது என சொல்லி மறுத்துவிட்டாராம் ரஜினி. அந்த அளவுக்கு கலைஞர் கருணாநிதி மீது ரஜினிகாந்த் அன்பு வைத்திருந்ததாக அமைச்சர் எ.வ.வேலு அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content