மொட்டுக் கட்சியின் வெற்றிக்காக மக்கள் காத்திருக்கின்றனர் – மஹிந்த

அரசியலமைப்பிற்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும், இவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்தால் அது ஐக்கிய தேசிய கட்சியின் முடிவாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பதுளையில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
‘இப்போது நாட்டு மக்கள் மொட்டுக் கட்சியினர் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
நாம் உடைந்து போனாலும், அன்று இருந்ததை விட இன்று நாம் பலமாக இருக்கிறோம்.
அரசியலமைப்பின் படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்யும் என நான் நினைக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு செயலைச் செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும். எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது எதுவும் கூறப்படவில்லை.
நாங்கள் அதை சரியான நேரத்தில் சொல்வோம், மக்கள் கட்சிகளைத் தவிர வேறு எதையும் தேடவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.