இலங்கை செய்தி

மொட்டுக் கட்சியின் வெற்றிக்காக மக்கள் காத்திருக்கின்றனர் – மஹிந்த

அரசியலமைப்பிற்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும், இவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்தால் அது ஐக்கிய தேசிய கட்சியின் முடிவாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பதுளையில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

‘இப்போது நாட்டு மக்கள்  மொட்டுக் கட்சியினர் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நாம் உடைந்து போனாலும்,  அன்று இருந்ததை விட இன்று நாம் பலமாக இருக்கிறோம்.

அரசியலமைப்பின் படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்யும் என நான் நினைக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு செயலைச் செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும். எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது எதுவும் கூறப்படவில்லை.

நாங்கள் அதை சரியான நேரத்தில் சொல்வோம், மக்கள் கட்சிகளைத் தவிர வேறு எதையும் தேடவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை