வாழ்வியல்

சிரித்துக் கொண்டே இருப்பவர்களின் மறுபக்கம்

நம்மை சுற்றி இருப்பவர்களில் சிலர், அல்லது உங்களுக்கு நெருக்கமான நண்பரே கூட, வாழ்வில் என்ன சோகம் வந்தாலும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நீங்கள் அவர்களின் வாழ்க்கை கதையை கேட்டுப்பார்த்தால் அவ்வளவு கடினமானதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள், இவ்வளவு சோகமான விஷயங்கள் தங்களது வாழ்வில் நடக்கும் போது எப்படி சிரித்துக்கொண்டிருக்கன்றனர் என கேட்க தோன்றும். அவர்கள், எப்படி இப்படி சிரித்துக்கொண்டே இருக்கின்றனர் தெரியுமா?

தன்னால் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணம்..

இப்படி சோகத்திலும் சிரித்துக்கொண்டே இருப்பவர்கள், தங்களுடைய பிரச்சனையை தங்களுக்கானதாக மட்டுமே பார்ப்பார்கள். இந்தப் பிரச்சினையை பிறரிடம் சொல்லி அவர்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்று நினைப்பர். இதனால் நாங்கள் என்ன கடினமான தருணங்களில் இருந்தாலும் அதனை ஒரு சிறு புன்னகையுடன் மறைத்து விடுவர். இதனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை இருக்கிறது, இவர்கள் உண்மையாகவே என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பது அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது.

தற்காத்துக் கொள்ளும் முறை:

நாம், சோகமாக இருக்கும் போது அதிலிருந்து தப்பிக்க, சில விஷயங்களை தற்காப்பு முறைகளாக பின்பற்றுவோம். இதற்குதான் defence mechanism என்று பெயர். உணர்ச்சி ரீதியாக மிகவும் அடிவாங்கியிருக்கிறோம் என்பதை காண்பித்துக்கொள்ளாமல் இருக்க, இவர்கள் சிரிப்பதை ஒரு தற்காப்பு முறையாக பயன்படுத்துவர். தாங்கள் பலவீனமானவர் இல்லை என்பதை காண்பிக்க இவர்கள் இம்முறையை பின்பற்றுவர்.

உணர்ச்சி அழுத்தம்:

தன் மனதுக்குள் என்ன வலி இருக்கிறாதோ, அதனை இவர்கள் பார்க்க மாட்டார்கள். அதற்கு மாறாக அதை மறைக்க ஒரு சிறு புன்னகையை எப்போதும் பதிலாக வைத்திருப்பர். இதனால், பிறருக்கு இவர்கள் வலியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும். இப்படி, இவர்கள் தங்கள் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை சரியாக உணராமல் போட்டு அழுத்துவதால் அது பின்னர் பெரிய பிரச்சனையாக வெளிபடும்.

பாசிடிவிட்டி:

துன்பம் வரும் வேளையிலும் அழாமல் சிரித்தால் தான் ஒரு பாசிடிவான மனிதராக இருக்கலாம் என இவர்கள் நினைத்துக்கொள்கின்றனர். இதனால், தன் மனதும் ஆறுதல் அடையும் என்று நினைக்கின்றனர். கவலையாக இருக்கும் போது அதனை மறைக்க சிரித்து தன்னை மகிழ்ச்சியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்கின்றனர். உண்மையில் இது அவர்களை இன்னும் சோகமாக்கும்.

முன்னர் பார்த்த துன்பம்:

ஒருவர், எந்த துன்பம் நேர்ந்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார் என்றால் அவர் இதற்கு முன்னர் அதை விட பெரிய துன்பங்களை கடந்து வந்திருக்கிறார் என அர்த்தம். தங்களின் சோகங்களை மறைக்க இது போன்ற சிரிப்பு மாஸ்கை அவர்கள் போட்டுக்கொள்வதுண்டு. தனது வலியை பிறர் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம்தான் இவர்களை இப்படி சிரிக்க வைக்கிறது.

பிறருக்கு மகிழ்ச்சி கொடுக்க..

பிறரை மகிழ்வித்தே ஒருவர் பழகி விட்டார் என்றால் அவரால் பிறர் எதிரில் சோகமாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், தன்னை வினோதமாக பார்ப்பார்களோ என்ற பயத்தினாலேயே இவர்கள், தனது உணர்வுகளை மறைத்து தன்னை மகிழ்ச்சியான மனிதராக காட்டிக்கொள்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான