செய்தி விளையாட்டு

இரண்டாவது முறை T20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் – விராட் கோலி களமிறங்கினர்.

இதில் முதல் ஓவரிலேயே 15 ரன்கள் அடித்து அதிரடியாக தொடங்கிய இந்தியாவுக்கு, 2-வது ஓவரை வீசிய கேஷவ் மகராஜா இரட்டை செக் வைத்தார்.

பின்னர் கை கோர்த்த விராட் கோலி – அக்சர் படேல் இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. விராட் கோலி ஒருபுறம் நிதானமாக விளையாட மறுமுனையில் அக்சர் அதிரடியாக விளையாடினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நோர்ஜே மற்றும் கேஷவ் மகராஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹெண்ட்ரிக்ஸ் 4 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கேப்டன் மார்க்ரனும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிளாசன் அதிரடியில் மிரட்டினார். குறிப்பாக அக்சர் படேல் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட மொத்தம் 24 ரன்களை திரட்டினார்.

இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு சாதகமாகவே ஆட்டம் இருந்தது.

18-வது ஓவரை வீச வந்த பும்ரா 2 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மார்கோ யான்சென் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

19-வது ஓவரை வீச வந்த அர்ஸ்தீப் சிங், வெறும் 4 ரன்களை மட்டும் கொடுத்து இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டினார். இதனால் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content