இலங்கை செய்தி

செவ்வந்தியைத் தேடி தேடுதல் வேட்டை

பாதாள தலைவன் கணேமுள்ள சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி என கூறப்படும் இஷாரா செவ்வந்தி மதுகம ரன்னகல பிரதேச வீடொன்றில் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உரிய வீட்டை சுற்றி வளைத்து இராணுவ பொலீஸ் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

“றொமீ ” எனும் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் அவ்வீட்டில் இருந்த எந்தத் தடயத்தையும் பெற முடியவில்லை என மதுகம பொலீசார் தெரிவித்தனர்….

இவ்வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படும் செவ்வந்தி பாதுகாப்பு படை சுற்றி வளைப்பதை அறிந்து காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பிரதேசம் முழுவதும் சல்லடைத் தேடுதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் இவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் உரிய வீட்டில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதுடன் இவ்வீட்டை சுற்றிப் பொலீசார் காவல் காத்து வருகின்றனர்.

(Visited 43 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை