இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தம்பதிக்கு நேர்ந்த கதி – கணவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதான வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியின் நித்திரை மயக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் முன்பகுதியில் பயணித்த வெளிநாட்டு தம்பதியினர் விபத்தில் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!