தமிழ்நாடு

டெலிவரி செய்யப்பட்ட பார்சல் …திறந்ததும் மயங்கி விழுந்த முதியவர் !

பிரபல ஒன்லைன் வணிக நிறுவனத்தில் மின்வயரை ஆர்டர் செய்த முதியவருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழக மாவட்டம், நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர், கடந்த 18ம் திகதி வீட்டிற்கு தேவையான மின்சார வயரை ஒன்லைன் வணிக நிறுவனம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார்.

பின்பு, அதற்கான தொகை 990 ரூபாயையும் 21ம் திகதி ஒன்லைனில் செலுத்தினார். இந்நிலையில், நேற்று மாலை வணிக நிறுவனத்தில் இருந்து பார்சல் டெலிவரி வந்துள்ளது.அதனை வாங்கி வைத்த வேலாயுதம், வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க சென்றுவிட்டார். பின்னர், பார்சலை பிரித்து பார்த்த போது மின் வயருக்கு பதிலாக காலி மதுபாட்டில் இருந்துள்ளது. இதனை பார்த்து வேலாயுதம் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வேலாயுதம் / velayutham

இது தொடர்பாக வேலாயுதம் கூறுகையில், “நான் இதுவரை பல முறை ஒன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன். ஆனால், இதுவரை இப்படி நடந்ததில்லை. பொதுமக்களிடம் ஒன்லைன் மோகம் அதிகரித்து வரும் நேரத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

நான் பார்சலை திறந்து பார்த்த போது மயங்கிவிட்டேன். நான் ஒரு இருதய நோயாளி. இது சம்மந்தப்பட்ட வணிக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்