இந்திய கிரிக்கெட் அணிக்கு என்றும் நாடு ஆதரவாக இருக்கும் – மோடி வெளியிட்ட அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்றும் என்றும் நாடு ஆதரவாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .
எக்ஸ் சமூக தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இறுதிப்போட்டியில் தோல்வியுற்றாலும் இத்தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக விளையாடியது இந்திய அணி.
இந்திய வீரர்கள் திறமையான ஆட்டம் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று பிரதமர் தனது பாராட்டுகளை மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை பாராட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “அரையிறுதி வரை ஒரு போட்டியில்கூட தோற்காமல் சிறப்பாக ஆடிய இந்திய அணியை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)