ஐரோப்பா

இந்த வார இறுதியில் தொடர்ச்சியான ஆர்பாட்டங்களுக்கு தயாராகி வரும் லண்டன் பெருநகரம்!

இந்த வார இறுதியில் லண்டன் முழுவதும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதரகங்களுக்கு அருகில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய ஸ்டேஜ் ஃபார் ஃப்ரீடம் (Stage for Freedom) ஏற்பாடு செய்த ஈரானிய அரசாங்க எதிர்ப்பு பேரணி, வைட்ஹாலில் (Whitehall) இருந்து ஈரானிய தூதரகம் வரை செல்லும்.

அதேபோல்   அணு ஆயுதக் குறைப்புக்கான பிரச்சாரம் (CND) உள்ளிட்ட குழுக்களின் தனி போராட்டம், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த போராட்டங்களுக்கு   பெருநகர காவல்துறை குறிப்பிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.

போராட்டக்காரர்கள் நியமிக்கப்பட்ட பாதைகளை கடைப்பிடித்து மாலை 5 மணிக்குள் தங்கள் பேரணிகளை முடிக்க வேண்டும், மேலும் ஈரானிய அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவிலான சத்தம் எழுப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே லண்டனுக்கு வெளியே மற்றொரு குழு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. அதாவது ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு பிரித்தானிய இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த ஸ்டாமர் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு எதிராகவும் போராட்டம் இடம்பெறவுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!