இலங்கை

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில நினைவேந்தலுக்கு தடைக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு முறியடிப்பு!

நினைவேந்தலுக்கு தடை கோரி ஊர்காவற்துறை நீதிமன்றத்திலே பொலிஸார் கடைசி நேரத்திலே தாக்கல் செய்த வழக்கை முறியடித்திருக்கிறோம் என சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நினைவேந்துகின்ற உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை தாக்கல் செய்த பொலிசார், நாங்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை நினைவு கோரப்போவதாகவும், தடை செய்யப்பட்ட சிவப்பு மஞ்சள் நிறங்களை நாங்கள் பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்கள்.

அவர்களுடைய வாதங்களை நாங்கள் முறியடித்திருக்கின்றோம். சிவப்பையும் மஞ்சளையும் பாவிப்பது தடை செய்யப்பட்ட வேண்டும் என்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது இலங்கையின் தேசியக்கொடி தான் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்.

இலங்கை தேசிய கொடியில் இருக்கின்ற சிவப்பு மஞ்சள் நிறங்களை எடுத்துவிட்டு வாருங்கள் அதன்பின்னர் நாங்கள் சிவப்பு மஞ்சளை தடை செய்வதற்கு தாயாராக இருக்கின்றோம் என்ற விடயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

பொலிஸாரின் தடை நிராகரிக்கப்பட்டுள்ளது. தீபங்கள் ஒளிரும் மக்கள் அச்சம் இன்றி அணி திரளலாம் என்றார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!