பொழுதுபோக்கு

மாரீசன் vs தலைவன் தலைவி : டாப்பு யார்? டூப்பு யார்?

ஜூலை மாதத்தின் நான்காவது வாரத்தில் தலைவன் தலைவி மற்றும் மாரீசன் திரைப்படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வசூலித்துள்ளது என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ள படம் மாரீசன். பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார்.

இப்படம் கடந்த ஜூலை 25-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் முதல் நாளில் வெறும் 75 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. இதையடுத்து இரண்டாம் நாளில் பிக் அப் ஆன இப்படம் ரூ.1.37 கோடி வசூலித்தது.

மூன்றாம் நாளான நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் நாளைக் காட்டிலும் கம்மியாகவே வசூலித்துள்ளது. அதன்படி மாரீசன் திரைப்படம் மூன்றாம் நாளில் ரூ.1.21 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது.

இதன்மூலம் மூன்று நாட்கள் முடிவில் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.3.33 கோடி வசூலித்திருக்கிறது.

ரொமாண்டிக் நகைச்சுவைப் படமான இதில் விஜய் சேதுபதி ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன் அவருடைய மனைவி பேரரசியாக நடித்திருக்கிறார்.

ஹோட்டல் உரிமையாளராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே. சுரேஷ், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தலைவன் தலைவி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் முதல் நாளில் ரூ.4.5 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் ரூ.7.25 கோடி வசூலித்தது. பின்னர் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி நேற்று மட்டும் இப்படம் ரூ.8.25 கோடி வசூலித்திருந்தது.

இப்படம் மூன்று நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.20 கோடி வசூலித்திருக்கிறது. உலகளவில் இதன் வசூல் 25 கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது. இதே வேகத்தில் சென்றால் இப்படம் விரைவில் 100 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content