பொழுதுபோக்கு

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு நிலவி வருகிறது. இந்த படம் அடுத்த மாதம், அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இன்று ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 1000 முதல் 1500 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக, டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தில் குவிந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

500-க்கும் மேற்பட்டோர் கைகளில் டிக்கெட் வைத்திருந்த போதும், அவர்களை போலீசார் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்கள் காசு செலவு செய்து டிக்கெட் வாங்கியும் அவர்களை உள்ளே விடாதது பலரை கோவத்தில் ஆழ்த்தியது. இதனால் சிலர் அங்கிருந்த போலீசாரிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

https://x.com/OnlineRajiniFC/status/1837126513139011699

(Visited 33 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்