வெப்பம் 44 பாகை வரை செல்லலாம்… ஹஜ் யாத்ரீகர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுரை

1.4 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்த ஆண்டு மெக்காவில் ஹஜ்ஜூப் புனித யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் வெப்பம் 44 பாகை செல்சியஸை எட்டலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. குடையைப் பயன்படுத்த வேண்டும்; அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
தகிக்கும் வெப்பத்தைக் கையாள ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன. 400க்கும் அதிகமான குளிரூட்டிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையே வெளியே வெப்பத்தில் இருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிழல் தரக்கூடிய பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
நடந்துசெல்லும் பாதைகள் சூட்டைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் ஆளில்லா வானூர்திகளும் பயன்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு வெப்பம் 51 டிகிரி செல்சியஸை வரை சென்றது. மரணமடைந்த யாத்திரீகர்களில் 80 சதவீதமானோர் பதிவு செய்யாதவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனால் அவர்கள் குளிரூட்டியுடன் கூடிய தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கவில்லை.