விளையாட்டு

தமிழ் வீரர் அசத்தல்: இலங்கை அணி வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. U-19 ICC உலகக்கிண்ண போட்டியில், தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது சுழல் புயல்மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அவரை பலரும் பாராட்டிவருகின்றனர். அவரது பந்து வீச்சு பாணி தொடர்பான காணொளியும் வைரலாகி வருகின்றது.

மேற்படி வெற்றியுடன் குழு 1இல் சுப்பர் சிக்ஸஸ் அணிகள் நிலையில் இலங்கை இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ள போதிலும் நிகர ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை விட பின்னிலையில் இருக்கிறது.

அயர்லாந்துடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தால் மாத்திரமே இலங்கை அரை இறுதிக்கு செல்லக்கூடியதாக இருக்கும்.

நேற்றைய ஆட்டத்தில் தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 262 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 46 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

விரான் சமுதித்த 110 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வழிசமைத்தார். ஆட்ட நாயகனாக விரான் சமுதித்த தெரிவு செய்யப்பட்டார்.

 

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!