தமிழ்நாடு

தமிழகம் – துப்பாக்கி சூடு நடத்தி பிரபல ரவுடியை மடக்கிப் பிடித்த பொலிஸார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் இவரது மகன் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41) இவர் மீது 6 கொலை, 3 கொலை முயற்சி 4 ஆள் கடத்தல் உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது

இந்த நிலையில் நேற்று மாலை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சென்னை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சத்யா வந்து இன்று காலை மீண்டும் சீர்காழி திரும்பி உள்ளார்

தேடப்படும் குற்றவாளியான சத்யா மகாபலிபுரம் பகுதியில் பிறந்தநாள் விழாவிற்கு வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி மாமல்லபுரம் அருகே பொலிஸார் வாகனம் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

மகாலிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பழவேலி வழியாக சென்னை நோக்கி செல்லும்போது பொலிஸார் பின் தொடர்வதை கண்ட சத்யா பழவேலி மலைப்பகுதியில் தப்பித்து ஓட முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது

சத்யாவை மடக்கி பிடித்த காவலர் ரஞ்சித் குமாரை அறிவாளள் பலமாக தாக்கியுள்ளார்

இதனால் தற்காப்புக்காக பொலிஸார் சுட்டதில் சீர்காழி சத்யாவிற்கு இடது காலில் குண்டு பாய்ந்து தற்பொழுது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் உள்ளது .

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content