பொழுதுபோக்கு

கைது செய்யப்படுவாரா தமன்னா? 8 மணி நேரம் கிடுக்குப்பிடி

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.

தமிழில் போதுமான வரவேற்பு இல்லாத நிலையில் மற்ற மொழி படங்களில் பிஸியான நடிகையாக இருக்கிறார். அடிக்கடி தனியார் விளம்பர நிகழ்ச்சியிலும் நடிப்பது உண்டு.

இந்த நிலையில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி சம்பந்தமான மோசடியில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் அளவிலான பணத்தை கொள்ளை அடித்த ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்று பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமலாக்கத்துறை தமன்னாவிற்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருக்கிறது.

நேற்று பிற்பகலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தமன்னாவிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக மட்டுமே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

See also  கபாலி பட நடிகை கர்ப்பமானார்... வெளிப்படையாக கொடுத்த போஸ்

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content