இலங்கையிலிருந்து நாளை விடைபெறுகிறார் அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang, நாளை (16) தாயகம் திரும்புகின்றார். இவ்வாறு விடைபெறவுள்ள தூதுவர், கடந்த சில வாரங்களாக பிரியாவிடை சந்திப்புகளை நடத்திவருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தி இருந்தார். பாதுகாப்பு செயலாளர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்திருந்தார். பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவை நேற்று சந்தித்து பிரியாவிடை பெற்றார். 53 வயதான ஜுலி சங், தென்கொரியாவை […]




