இலங்கை

சீரற்ற காலநிலை – மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

  • November 26, 2025
  • 0 Comments

நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 877 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 4 வீடுகள் முழுமையாகவும், 250 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் 33 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அடுத்து சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை – மூன்று பேர் உயிரிழப்பு!

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சீரற்ற வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் இயற்கை பேரழிவுகளால்  மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுக்கைக்கு அருகில் […]

இலங்கை

இலங்கையின் பல இடங்களில் மின் துண்டிப்பு!

  • October 5, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார வாரியத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் மற்றும் நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 30,000இற்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மின் தடைகளை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொழிற்சங்க நடவடிக்கை 31 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் சரியான முறையில் பதிலளித்தால், உடனடியாக மின் தடைகளை மீட்டெடுக்க முடியும் […]

error: Content is protected !!