அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்காக களமிறங்கும் இந்தியா: ஜெய்சங்கரிடம் மோடி அனுப்பும் செய்தி என்ன?

  • December 20, 2025
  • 0 Comments

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், இது விடயத்தில் இந்தியா முக்கிய வகிபாகத்தை வகிக்குமென தெரியவருகின்றது. தனது இலங்கை பயணத்தின்போது கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடனேயே எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகின்றார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதன் முதலில் இந்தியாவே நேசக்கரம் நீட்டியது. மீட்பு […]

அரசியல் இலங்கை செய்தி

திங்களன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார் என தெரியவருகின்றது. இலங்கைக்கு உயர்மட்ட பிரதிநிதியொருவரை சீனா அனுப்பி இருந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத் துறையையும் தாக்கியதா டித்வா புயல்?

  • December 18, 2025
  • 0 Comments

பேரிடருக்கு மத்தியிலும் நாம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடர்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். “நெருக்கடியான காலகட்டத்திலும் நாம் சுற்றுலாத்துறையை கைவிடவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் முதல் 10 நாட்களுக்குள் 93 […]

இலங்கை செய்தி

ரயில் கட்டமைப்பை மீளமைக்க சீனாவிடம் தொழில்நுட்ப உதவி கோருகிறார் அநுர!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு சீனாவிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்படி கோரிக்கையை விடுத்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி […]

இலங்கை செய்தி

200 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை கையளித்தது பாகிஸ்தான்!

  • December 16, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் உதவிப் பொருட்களை பொறுப்பேற்றனர். பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார். பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி, விநியோக ஏற்பாடு குறித்து விசேட கூட்டம்!

  • December 16, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிடைக்கப்பெறும் வெளிநாட்டு உதவிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு மனிதாபிமான உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது மூன்றாவது கூட்டத்தை அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயலகத்தில் நேற்று நடத்தியது. இதன்போதே மேற்படி விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவே மேற்படி குழுவுக்கு தலைமை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஆஸ்திரேலியா துணை நிற்கும்: பிரதமரிடம் உறுதியளிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

பேரிடரால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் பிரதமர் கலாநிதி ஹரினி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்படி உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையை பாதித்த திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர், மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக ஆஸ்திரேலியா வழங்கிய […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ தொடர்கிறது டில்லியின் உதவி: சிறப்பு விமானமும் அனுப்பி வைப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா சகல வழிகளிலும் உதவி வருகின்றது. அந்தவகையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி, இன்று முற்பகல் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்று வந்த உலங்குவானுர்தியில் 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு வந்துள்ளது. […]

இலங்கை

இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

  • December 6, 2025
  • 0 Comments

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்குரிய தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் இராஜதந்திர சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் தலைமையிலேயே இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அவசரகால சூழ்நிலையின்போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காகவும் அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய கூட்டாளர்களுக்கு பிரதமர் அமரசூரிய இதன்போது நன்றி தெரிவித்தார். இலங்கை இப்போது அவசரகால பதிலளிப்பு கட்டத்திலிருந்து, மீட்பு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பலி எண்ணிக்கை 600 ஐ தாண்டியது!

  • December 5, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 214 பேர் காணாமல்போயுள்ளனர். 4 ஆயிரத்து 164 வீடுகள் முழமையாகவும், 67 ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 43 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் 5 லட்சத்து 86 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த […]

error: Content is protected !!