இலங்கை – வாடகை வீட்டிற்கு குடிபெயரும் சந்திரிகா!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பில் உள்ள தனது அதிகாரப்பூர்வ அரசாங்க இல்லத்தில் இருந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியேறி வாடகை வீட்டிற்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, அவரது உடல்நலக்குறைவு காரணமாக இந்த நடவடிக்கை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலை காரணமாக, அவர் அரசாங்கத்திடம் 34 மாத கால நீட்டிப்பு கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது வசித்து […]