நாமலை களமிறக்கி புது அரசியல் ஆட்டத்தை ஆடும் ரணில்?
தமது கட்சியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வழிநடத்துகின்றார் என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (18) ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பங்கேற்றிருந்தார். இதன்போது “ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ரணில் விக்கிரமசிங்கவே வழிநடத்துகின்றார் என்ற கருத்து அரசியல் களத்தில் நிலவுகின்றது. நாமல் ராஜபக்கவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஆட்சியை பிடிப்பதற்கு அவர் முற்படுகின்றார் எனவும் கூறப்படுகின்றது. […]




