போருக்கு மத்தியில் ஈரானிய புத்தாண்டை வரவேற்கும் மக்கள்!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சுமார் 30 கோடி மக்கள் ஈரானிய புத்தாண்டான ‘nowruz’ பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பழமையான ஜொராஸ்ட்ரியன் (Zoroastrian) பாரம்பரியப் பண்டிகை, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றது . சுமார் 13 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




