முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார். கண்டி பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர், சட்டத்துறையிலும் சமூக மட்டத்திலும் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தார். அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள் நாளை (04) மாலை 6 மணிக்கு கண்டி, மஹய்யாவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




