அரசியல் இலங்கை செய்தி

கொழும்புக்கு தோள் கொடுக்கும் பீஜிங்! அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 23, 2025
  • 0 Comments

“ இலங்கைக்கு தேவையான உதவிகளை சீனா நிச்சயம் வழங்கும்.” – என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமானவாங் ஜுன்செங் உறுதியளித்துள்ளார். “ ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் அவர் கூறினார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுக்குழு, ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (23) சந்தித்து பேச்சு நடத்தியது. அனர்த்த நிலைமையில் […]

இலங்கை செய்தி

சீன உயர்மட்ட குழுவும் கொழும்பு வருகை: பின்னணி என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

இருநாள் பயணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (23) இலங்கை வந்தடைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் செயலாளரும், அக்கட்சியின் 20 ஆவது மத்திய குழு உறுப்பினருமான வாங் ஜுன்செங் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது. அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்களுக்குரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் முனையத்தில் அமைச்சருக்கும், சீனத் தூதுக்குழுவின் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை நோக்கி சர்வதேச பிரதிநிதிகள் படையெடுப்பு: முக்கிய புள்ளிகளை களமிறக்கும் டில்லி, பீஜிங்!

  • December 21, 2025
  • 0 Comments

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழு தலைவர் ஜாவோ லெஜி நாளை மறுதினம் (23) இலங்கை வருகின்றார். சீனாவில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக இவர் கருதப்படுகின்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) கொழும்புவரும் நிலையிலேயே இவரது விஜயமும் இடம்பெறுகின்றது. ஜாவோ லெஜியின் கொழும்பு பயணம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியாக இருந்தன. இவ்விஜயத்தின்போது அவர் இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித்திட்டங்களையும் அறிவிக்க இருந்தார். இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

திங்களன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார் என தெரியவருகின்றது. இலங்கைக்கு உயர்மட்ட பிரதிநிதியொருவரை சீனா அனுப்பி இருந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் சீனா!

  • December 17, 2025
  • 0 Comments

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களின்போது இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கொழும்பு வந்துள்ள வாங் டோங்மிங்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு, மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் […]

இலங்கை செய்தி

ரயில் கட்டமைப்பை மீளமைக்க சீனாவிடம் தொழில்நுட்ப உதவி கோருகிறார் அநுர!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு சீனாவிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்படி கோரிக்கையை விடுத்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி […]

அரசியல் இலங்கை செய்தி

பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு: அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீனத் தூதுக்குழுவின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. “டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுக்கு இணையாக சீனாவும் களத்தில்: பீஜிங் உயர்மட்ட தலைவர் 23 ஆம் திகதி கொழும்பு விஜயம்!

  • December 14, 2025
  • 0 Comments

சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறும் என்று ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் மூன்றாவது அதிஉயர் அதிகாரம் படைத்தவரான, சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழு தலைவரான சோ லெஜி என்பவரே இரு நாள் விஜயமாக இலங்கை வருகின்றார். பேரிடருக்குப் பின்னர், இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையிலேயே தமது உதவி […]

ஆஸ்திரேலியா செய்தி

பசுபிக் பிராந்திய பாதுகாப்பு: ஆஸ்திரேலியா புது வியூகம்!

  • December 13, 2025
  • 0 Comments

பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடலுக்கடியில் மூன்று கேபிள் இணைப்புத் திட்டங்களை கூகுள் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது. பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதற்குரிய நிதி உதவியை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. மேற்படி கேபிள் திட்டமானது பப்புவா நியூ கினியாவின் டிஜிட்டல் துறையில் புரட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பப்புவா நியூ கினியா உட்பட பசுபிக் பிராந்தியத்தில் தனத செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு சீனா தீவிர் காட்டிவருகின்றது. பப்புவா நியூ […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனாவின் உதவியும் தொடர்கிறது!

  • December 13, 2025
  • 0 Comments

பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனா உதவும் என நம்பப்படுகின்றது. வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் தொடர்ந்து ஆதரவளிப்பதாக யாங் வான்மிங் உறுதியளித்தார். இலங்கை உடனான சீனாவின் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட […]

error: Content is protected !!