செய்தி

“வடக்கு, கிழக்கில் முகாம்கள் இருப்பதே தமிழர்களுக்கு பாதுகாப்பு” – மஹிந்த அணி கண்டுபிடிப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

” வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார Shantha Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறை மதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது. ஆனால் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் சுதந்திரத்தினத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளை […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகளை ஒழிப்பதற்கான போர் தமிழர்களுக்கு எதிரானது அல்ல – நாமல்!

  • February 6, 2026
  • 0 Comments

“நாம் தமிழர்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே போர் இடம்பெற்றது. எனவே, புலிகள் அமைப்பை தோற்கடித்தமை இனவாதம் கிடையாது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். ” படையினர் போரை முடிவுக்கு கொண்டுவந்தது தொடர்பில் சுதந்திர தின நிகழ்வில் பெருமையாகக் கூறப்படவில்லை. அதைவிடுத்து டித்வா புயல் பற்றியே வர்ணனை வழங்கப்பட்டது. சில நாடுகளில் முதலாம் உலகம்போரில் கிடைத்த வெற்றி தொடர்பில்கூட இன்றளவிலும் பேசப்படுகின்றது.” […]

அரசியல் இலங்கை செய்தி

“வடக்கிலிருந்து படைகளை முற்றாக அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு”

  • February 2, 2026
  • 0 Comments

” வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை. அவை இருப்பதால்தான் தமக்கு பாதுகாப்பு என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச Wijeyadasa Rajapaksa தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தைப்பொங்கல் விழாவுக்காகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றார். தமிழ் மக்களின் மனங்களில் “வைரஸை” விதைத்தார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்ட முனைந்தார். ஏனைய ஜனாதிபதிகளைவிட அநுரவுக்கு வடக்கு, […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு தமது பகுதியை ஆளும் அதிகாரம் அவசியம்: ராஜித வலியுறுத்து!

  • January 23, 2026
  • 0 Comments

“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne வலியுறுத்தினார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு இடித்துரைத்தார். “ போர் முடிவடைந்த கையோடு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தேன். அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க […]

இலங்கை செய்தி

அநுர அரசுமீது தமிழர்களுக்கு நம்பிக்கை: ஆஸ்திரேலிய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் எடுத்துரைப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) உடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போது மாகாணத்தின் பொருளாதாரம் குறித்தும் ஆளுநர் தெளிவுபடுத்தினார். ” வடக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ஆகிய […]

error: Content is protected !!