22 ஆம் திகதி இலங்கை வருகிறது IMF குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) குழவினர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொடர்பில் 5ஆவது மீளாய்வு கூட்டத்துக்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர். இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என தெரியவருகின்றது.




