இலங்கை செய்தி

காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநர், படை தளபதி ஆராய்வு!

  • February 3, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி […]

இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலை அமைக்க ஏற்பாடு!

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை National Film School ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தலைமையில் agath Manuwarna நடைபெற்ற கூட்டத்திலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்னவும் Dr. Kaushalya Ariyaratne கலந்துகொண்டார். அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் […]

இலங்கை செய்தி

ஊழலை ஒழிப்பதில் அநுர அரசு உறுதி:வடக்கு ஆளுநர் திட்டவட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

“ஊழலை ஒழிப்பதில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான்” – எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி […]

இந்தியா தமிழ்நாடு

தி.மு.கவை கொதிப்படைய வைத்துள்ள மோடியின் எக்ஸ் பதிவு!

  • January 23, 2026
  • 0 Comments

தமிழகத்தை ஆளும் தி.மு.கவுக்கு விடைகொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி Modi தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நிற்கின்றது எனவும் அவர் கூறினார். பா.ஜ.க. உள்ளடங்கலாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்த நிலையிலேயே மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பான பதிவை அவர், தமிழ் மொழியிலேயே பதிவிட்டுள்ளார். “ தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் […]

இந்தியா தமிழ்நாடு

அனல் கக்கும் தமிழக அரசியல் களம்: நாளை நேரில் களமிறங்கும் மோடி!

  • January 22, 2026
  • 0 Comments

பிரதமர் மோடி நாளை (23) தமிழகம் வருகின்றார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே மோடிவருகின்றார். பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் அனல் கக்குகின்றது. தமிழகத்தில் பிரதான கட்சிகளுள் ஒன்றான அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, டி.டி.வி. தினகரன் […]

அரசியல் இலங்கை செய்தி

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் பிளவா?

  • January 19, 2026
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance முக்கிய கூட்டத்தை அதன் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Selvam Aidakalanathan புறக்கணித்துள்ளார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய அரசியல் கலந்துரையாடல் நேற்றுக் காலை முதல் பிற்கல் வரை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதில் அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, சமத்துவக் கட்சி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதன் […]

அரசியல் இலங்கை செய்தி

சிறையில் அடைத்தால்கூட அஞ்சமாட்டோம்: ஜனாதிபதியின் சொந்த ஊரில் முழங்கிய நாமல்!

  • January 17, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். எம்மை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார். அநுராதபுரம், தம்புத்தேகமயில் இன்று (17) நடந்த அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு சூளுரைத்தார். 1988 மற்றும் 1989 களில் போட்ட ஆட்டத்தை எங்களிடம் போட வரவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் […]

இலங்கை செய்தி

வடக்குக்கான முதலீடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

  • January 3, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்களுக்கு எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் இன்று (3) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முதலீட்டு வலயங்கள் தொடர்பான விரிவான சாத்தியவள ஆய்வு அறிக்கையானது, இம்மாத இறுதிக்குள் இலங்கை முதலீட்டுச் சபையிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. குறித்த […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டுக்குரிய அரசியல் சமர் 5 ஆம் திகதி ஆரம்பம்!

  • January 2, 2026
  • 0 Comments

பிரதான அரசியல் கட்சிகள் 2026 ஆம் அண்டுக்கான தமது முதலாவது விசேட கூட்டங்களை எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் 6 ஆம் திகதி கூடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டமும் 5 அல்லது 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இது […]

error: Content is protected !!