புதுடெல்லி பறந்தார் ஜே.வி.பி. செயலாளர்!
ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா tilvin silva தலைமையிலான குழுவினர் இன்று (05) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பேரிலேயே அவர்கள் புதுடெல்லி நோக்கி பயணமானார்கள். இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்று, முதலமைச்சர்கள் உள்ளிட்டோரும் சந்திப்பு நடத்தவுள்னர். இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களுக்கு கண்காணிப்பு பயணமும் மேற்கொள்ளவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், இளங்குமரன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.




