அரசியல் இலங்கை செய்தி

பிரதமர் பதவி விலகும்வரை ஓயமாட்டோம்: சஜித் அணி திட்டவட்டம்!

  • January 17, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி Harini Amarasooriya அமரசூரிய விலகும்வரை எமது போராட்டம் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார Rohana Bandara தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. இதில் உரையாற்றிய ரோஹன பண்டார எம்.பி., “ நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் வரும். […]

உலகம் செய்தி

பற்றி எரிகிறது ஈரான்! இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா?

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள தமது படைத்தளங்களில் இருந்து சில பணியாளர்களை நாடு திரும்புமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரியொவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தமது நாட்டுமீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் பாதுகாப்பு தளங்கள்மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்நிலையிலேயே மத்திய கிழக்கிலுள்ள தமது படை தளங்கள் தொடர்பில் அமெரிக்கா கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. ஈரானில் வரலாறு காணாத வகையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. மக்களை தூண்டிவிட்டு வன்முறையை அமெரிக்காவும், […]

இந்தியா

“ உடன் வெளியேறுக” ஈரானிலுள்ள இந்தியர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுப்பு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், அங்கிருந்து உடன் வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தால் இது தொடர்பில் விசேட அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், கிடைக்கக் கூடிய போக்குவரத்தைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது. ஈரானில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக் கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளனர். ஈரானில் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் […]

ஆஸ்திரேலியா

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஈரான் மக்களின் துணிச்சலான போராட்டத்திற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கின்றது என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Benny Wong அறிவித்துள்ளார். ஈரான் அரசாங்கம் அதன் சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போராட்டக்காரர்;கள் கொலை செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் […]

உலகம்

ஈரானில் உக்கிரமடையும் போராட்டம்: கூட்டு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல், அமெரிக்கா?

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் திகதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. “ஜென் இசட்” இளைஞர்கள் தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, ஜனாதிபதி மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தினர். இதனையடுத்து கடந்த இரு வாரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரான் முழுவதும் வியாபித்து பரவி […]

அரசியல் இலங்கை செய்தி

வெற்றி விழா கொண்டாடிய விமல் வீரவன்ச!

  • January 13, 2026
  • 0 Comments

தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இதனால் தனது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமர சூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே விமல் நேற்று போராட்டத்தில் குதித்தார். கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2027 […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர்மீது விமல் விமர்சனக் கணை தொடுப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச சூளுரைத்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்ச இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர் போல செயல்படுவதாகவும், கல்வி […]

இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் இன்று (05) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடதுசாரி அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். வெனிசுலா இறையாண்மைமிக்க சுதந்திர நாடெனவும், அதன்மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி கைது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். போரை உருவாக்கி, எண்ணைவளத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர் எனவும் […]

அரசியல் இலங்கை செய்தி

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று போராட்டம்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (05) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியாலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என சமூகவலைத்தள பிரச்சாரமொன்றில் மேற்படி கட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்துமாறும், இலத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்துமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் இருந்து பிரிந்து சென்ற குழுவினராலேயே முன்னிலை சோசலிசக் கட்சி […]

இலங்கை செய்தி

“தையிட்டி மண் தமிழர்களின் சொத்து” – விண்ணதிர முழங்கிய கோஷம்: பொலிஸார் குவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமது காணியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டு காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே காணி உரிமையாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சட்டவிரோத கட்டிடங்களை உடனே அகற்று என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா எனவும் கேள்வி எழுப்பினர். தையிட்டி மண் தமிழர்களின் சொந்த மண், அதனை உரிமையாளர்களுக்கு வழங்கு எனவும் கோஷங்களை எழுப்பினர். தையிட்டி விகாரை பகுதியில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெருமளவு பொலிஸார் […]

error: Content is protected !!