தொழில்சார் கௌரவம் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் , ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்கவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதி செவிமடுத்தார். அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார். “ பாடசாலைகளில் […]





