இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இத்தாலி!
இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கெப்டன் (Navy) Armando Paolo SIMI, இன்று பிற்பகல் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றது. வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இத்தாலி பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய இருவரும் இருதரப்பு முக்கியத்துவம்மிக்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். அத்துடன், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர உறவுகள் நினைவு கூரப்பட்டதுடன், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் […]




