ஐரோப்பா செய்தி

சுவிஸ் மூன்று தீவிரவாத இளைஞர்கள் பொலிஸாரினால் கைது

தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை சுவிஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

15, 16 மற்றும் 18 வயதுடைய மூவரும் ஷாஃப்ஹவுசன் மற்றும் துர்காவ் மாகாணங்களில் கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

அவர்கள் சுவிட்சர்லாந்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ISIS அமைப்புடன் தொடர்புகளை பேணி ‘கொலை செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் எந்த கூடுதல் விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இளைஞர்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது வழக்கு இது என தெரிவித்துள்ளார்கள்.

மார்ச் மாத தொடக்கத்தில், சூரிச்சில் ஒரு யூத மனிதரைக் கொன்றதற்காக 15 வயது இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 22 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!