இலங்கை செய்தி

ராஜ்குமாரியின் மரண் தொடர்பில் சந்தேக நபர்கள் அடையாளம்

தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணியாற்றி பெண்ணின் மரணம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (18) அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதர்மா நெத்திகுமார, அவரது பணிப்பெண், சாரதி மற்றும் உயிரிழந்த பணிப் பெண்ணை பணிக்கு அமர்த்திய தரகர் உட்பட ஐந்து பேர் சாட்சிகளாக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சந்தேகநபர்களை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார, பொலிஸ் சார்ஜன்ட்களான பிரேமச்சந்திர பஸ்நாயக்க, காமினி ஜயசிங்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மலிங்க ஜயவர்தன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!