பொழுதுபோக்கு

படத்திற்காக தான் சிகரெட் அடித்தேன்… சிகரெட் குறித்து பேசிய நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக கங்குவா படம் வெளிவந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

ஆனால், சூர்யாவிற்கு ரெட்ரோ படம் மாஸ் கம் பேக் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வருகிற மே 1ம் தேதி இப்படம் உலகெங்கும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் நடிகர் சூர்யா.

இந்த நிலையில், ப்ரோமோஷன் விழா ஒன்றில், இப்படத்தில் சிகரெட் பிடித்தது குறித்து பேசியுள்ளார்.

இதில் “இந்த படத்திற்காக தான் சிகரெட் அடித்தேன். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் சிகரெட் அடிக்காதீர்கள். ஆரம்பிச்சா விட முடியாது.

ஒன்னு தானே, ஒரு பஃப் தானே நினைப்பீங்க, ஆனால் ஆரம்பிச்சா விடவே முடியாது. நான் அதை எப்போதும் ஆதரிக்க மாட்டேன்” என பேசியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்