பொழுதுபோக்கு

நடிகர் ஜெயசீலனின் உயிரை பறித்த மஞ்சள் காமாலை நோய்..

பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் அடியாட்கள் கூட்டத்தில் நடித்து பிரபலமான ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோய் தீவிரம் அடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலை அறிந்த அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார்.

40 வயதாகும், இவர் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மஞ்சள் காமாலை நோய் தீவிரம் அடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலை அறிந்த அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவரின் இறுதிச் சடங்குகள், வண்ணாரப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான படங்களில் நடித்த போதும், இதுவரை இவரை அடையாளப்படுத்தும் விதமாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை. சினிமாவில் சாதிக்க வேண்டும் என தன்னால் முடிந்தவரை போராடி வந்த இவருக்கு அடியாள் கூட்டங்களில் வரும் கதாபாத்திரங்களே அதிகம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

40 வயது ஆகும் நடிகர் ஜெயசீலன் திடீர் மறைவு, அவருடைய குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பல ரசிகர்கள் தொடர்ந்து ஜெயசீலனுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதுவரை இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 59 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!