பொழுதுபோக்கு

மானஸை கலட்டி விட்ட சுபிக்ஷா… தொழிலதிபருடன் இரண்டாம் திருமணம்

நடிகை ஆல்யா மானசா, சீரியல் நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் தன்னுடன் இணைந்து நடனமாடிய மானஸ் என்பவரை

கருத்து வேறுபாடு காரணமாக ஆலியா மானஸாவை பிரிந்த மானஸ், சீரியல் நடிகையும், டான்சருமான சுபிக்ஷா என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மிகப் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

மானஸ் நீயா 2 படத்தில் வரலட்சுமி உடன் சேர்ந்து ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளது மட்டுமின்றி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், செவ்வந்தி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

அதை போல் சுபிக்ஷா, ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்கிற சீரியலில் அறிமுகமான நிலையில், பின்னர் சி வி குமார் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘கொற்றவை’ என்கிற படத்தில் நடித்தார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘ரஜினி’ சீரியலிலும் நடித்திருந்தார். அடுத்தடுத்து சில சீரியல்களில் நடித்து வரும் சுபிக்ஷா… மானசை திருமணமான 2 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய சமூக வலைதளத்தில் இருந்து, மானசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கி இந்த தகவலை உறுதி செய்தார். இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த தொழிலதிபர், அவினாஷ் வாசுதேவன் என்பவரை சுபிக்ஷா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமணம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content