இலங்கை

வலுப்பெறும் காற்றழுத்தம் : மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தில், இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மையம் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு நாளை (23.10) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு வளைகுடாவில் நீண்டகாலமாக பயணங்களை மேற்கொள்ளும் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய-மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி அடுத்த 24 மணி நேரத்தில் வங்கதேச கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது காற்றாது 40-45 கி.மீ வேகத்தில் வீசுவதுடன், சில நேரங்களில் 50-60 கி.மீற்றர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

அத்துடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நீண்டகால கடற்பயணங்களை மேற்கொள்ளும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content