பொழுதுபோக்கு

என்னடா இது… ஆட்ட நாயகன், வேட்டை மன்னன் விஜய் மகனுக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, மலையால மொழிகளிலும் வசூல் மன்னனாக ஆட்ட நாயகனாக ஜொலித்து வரும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அடி எடுத்து வைத்திருக்கிறார்.

அதனால் பெரிய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் விதமாக லைக்காவுடன் இணைந்து முதல் படத்திற்கு அஸ்திவாரம் போட்டார். ஆனால் போட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இடைப்பட்ட நேரத்தில் இதற்கான ஹீரோவை தேடும் வேலையில் இருக்கிறோம் என்ற தகவல் வெளியானது.

அந்த வகையில் விஜய் சேதுபதி, துருவ் விக்ரம் இவர்கள் பெயர் அடிபட்ட நிலையில் இவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் அடுத்து கவினை சந்தித்து பேசியதாக தகவல் வெளிவந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கவினும் அவர் கடைசியாக கொடுத்த பேட்டியில் இப்படி ஒரு வாய்ப்பு வந்ததாக கூறியிருந்தார்.

ஆனால் தற்போது கவினும் கதை கேட்டதோடு சரி எந்தவித பதிலும் சொல்லாமல் டாட்டா காட்டிவிட்டார். அதற்கு காரணம் ஜேசன் சஞ்சயிடம் கதை கேட்ட ஹீரோகளுக்கு பெருசாக கதையின் மீது ஈடுபாடு இல்லாததால் அப்படியே பாதியில் போய்விட்டார்கள் என்று கூறப்படுகிறது. .

ஆனால் ஜேசன் சஞ்சய்க்கு அவர் மீது இருக்கும் அதீத நம்பிக்கையால் இந்த படத்திற்கு முன்னணி ஹீரோக்களை வைத்து தான் எடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார்.

ஏனென்றால் அவர்களை வைத்து இயக்கினால் தான் முதல் படத்திலேயே பிசினஸில் அதிக லாபத்தை கொடுக்கும் என்பதினால். ஆனால் முன்னணி நடிகர்களோ அனுபவம் இல்லாத ஜேசன் சஞ்சயை நம்பி எப்படி நடிப்பது என்று தயக்கம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யின் மகன் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் அவர் கதை சொல்லு வரும் பொழுது உட்கார்ந்து கதையை கேட்கிறார்கள்.

பிறகு ரொம்பவே பிஸியாக இருப்பது போல் காட்டி கால்ஷீட் கொடுக்காமல் அலறி அடித்து ஓடிவிடுகிறார்கள். இதனால் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிப்பதற்கு எந்த ஹீரோவும் கிடைக்காமல் கடந்த ஒரு வருடமாக படத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content