இலங்கை

தொடர்ந்து தாமதங்களை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு கட்டுநாயக்காவில் தரையிறக்கப்பட வேண்டிய விமானம் ஒன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

குறித்த விமானமானது 204 பயணிகளுடன் அங்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி இயக்கக் குழுவினர் தங்கள் விமானக் கடமை நேரத்தை மீறியதால், விமானம் மத்தளவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் குறித்த விமானம் சிங்கப்பூரில் இருந்து  புறப்பட்ட போது தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தாமதமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், தொழில்நுட்ப தாமதம் மற்றும் அதனைத் தொடர்ந்து மாற்றியமைப்பினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.

அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தியது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!