பொழுதுபோக்கு

இலங்கையில் உருவானது மதுரை… கொழும்பில் பரபரக்கும் பராசக்தி ஷூட்டிங்

அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் லெவல் வேற மாதிரி மாறிவிட்டது. அடுத்தடுத்து மாஸ் இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்துள்ளார்.

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் ராம்நாத், பிரித்விராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமக்கிறார். இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25ஆவது படம். ஆதலால், இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது.

பராசக்தி படத்தின் படப்பிடிப்பிற்காக சிவகார்த்திகேயன் 11ஆம் தேதி இலங்கை சென்றார். 12ஆம் தேதி கொழும்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இங்கு தான் படத்தின் முக்கியமான பகுதிகளின் காட்சிகள் படமாக்க பட்டுள்ளது.

இதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் டெல்லி போன்று பிரத்யேகமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை ரயில்நிலையம் போன்று செட் போடுவதற்கு பதிலாக மதுரையிலேயே படப்பிடிப்பு எடுத்திருக்கலாம்.

ஆனால், போதுமான வசதிகள் மற்றும் அனுமதி போன்ற காரணங்களுக்காக மதுரையில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை என்பதால் செட் அமைத்து படமாக்கி வருகிறார் சுதா கொங்கரா.

இதனால், கொழும்புவில் மதுரை ரயில் நிலையம் போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் படப்பிடிப்பில் குரு சோமசுந்தரம் தொடர்பான காட்சிகளும் படமாக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக சென்னை, சிதம்பரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. பராசக்தி படம் ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்