இலங்கை

ஊடகத்துறையில் பிரித்தானியாவிற்கு இணையான சட்டங்களை அறிமுகம் செய்ய தீர்மானம்!

ஊடகத்துறையில் பிரித்தானியாவிற்கு இணையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊடகங்களை ஒடுக்குவதற்காக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தை முழுமையாக எதிர்ப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் தலைமையில் பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல, மனுஷ நாணயக்கார ஆகிய அமைச்சர்கள் அங்கம் வகித்த உபகுழு தயாரித்த ஆவணம் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்ட மூலம் என்ற பெயரில் புகுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் வாயிலாக இலத்திரனியல் ஊடகங்களின் அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்வதற்கும், தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும், ஊடகவியலாளர்களை கைது செய்வதற்கும், சிறைத்தண்டனை விதிப்பதற்கு, அபராதம் விதிப்பதற்கு, ஊடக நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுகின்றது.

இந்த நிலையில் பிரதான எதிர்கட்சி மற்றும் எதிர்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் ஏகமனதாக எதிர்ப்பினை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content