இலங்கையில் நாளை மறுதினம் வெளியாகும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பரீட்சைகள் நடந்த நிலையில் பெறுபேறுகள் நாளை மறுதினம் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 42,883 ஆகும்.
(Visited 28 times, 1 visits today)





